இறுதி நபி

எனக்கும் எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கு உதாரணம் அழகாக அழங்கரித்து ஒரு வீட்டைக்கட்டி விட்டு
 ஒரு மூலையில் செங்கல் அளவிற்க்கு இடத்தை விட்ட ஒரு
 மனிதனைப்போன்று. மக்கள் அந்த வீட்டை சுற்றிப்பார்த்து ஆச்சிரியம் அடைந்து அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா ? என்று கேட்கலானார்கள் நான் தான் அந்த செங்கல்  நான் தான் நபிமார்களின் முத்திரையானவன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா  (ரலி)    நூல்: புகாரி(3535)

                
தனக்கு பின்னால் வஹியோ தூ‎தரோ  வரவேண்டியதில்லை என்பதை முன்அறிவிப்பு செய்யும் விதமாக வீட்டை தூதுத்துவத்துக்கும் குறையை முழுமைப்படுத்துகின்ற செங்கல்லை  தனக்கு உதாரணமாக கூறியுள்ளார்கள். இன்னும் நபிமார்களின் முத்திரை என்றும் சாதாரணமான மக்களுக்கு விளங்கும் விதமாக கூறியுள்ளார்கள். ஒரு பொருளை முத்திரை  (சீல்)  வைத்து அடைத்து விட்டால் அது திறக்கப்படாமல் தான், நாம் பயன்படுத்தமுடியும். அதுபோலத்தான்  தூதுத்துவம் என்பதும்,   தான் வந்ததால் முத்திரையிடப்பட்டுவிட்டது எனவே தூதுத்துவம் அடைக்கப்பட்ட பொருளைப்போன்று ஆகிவிட்டது என்பதை கு:றிக்கும் விதமாக நபியவர்கள் மிக நுட்பமான உதாரணத்தை கூறியுள்ளார்கள். இந்த உதாரணத்தின் மூலம் வருங்காலத்தில் எந்த நபியும் வர வாய்ப்பு இல்லை என்பதை முஸ்லிம்கள் உறுதியாக நம்பவேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். பிற்காலத்தில் தானும் ஒரு நபிதான் என்று வருபவர்களை நம்பக்கூடாது என்பதற்கும் இந்த உதாரணத்தின் மூலம் அறிவுரை நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்னும் நபியவர்கள் இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக கூறியுள்ள செய்திகள் ஏராளம் உள்ளன.

எனக்கு பின் எந்த நபியும் ரஸூலும் இல்லை

தூதுத்துவமும் நபித்துவமும் முற்றுபெற்று விட்டது எனக்குப்பின்னால் எந்த நபியும் ரஸூலும் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் நூல்         : திர்மிதி(2198)

                      

 நபியவர்களுக்குரிய தனிப்பெயர்

எனக்கு பல பெயர்கள் உண்டு; நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன், அல்லாஹ் என் மூலம் இறை மறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்பவர்) ஆவேன்; நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என்று நபிகளார் கூறினார்கள்.

 அறிவிப்பவர்  : ஜுபைர்  பின் முத்யிம் (ரலி) நூல்கள்          : புகாரீ (4896), முஸ்லிம் (4342)

              

அல்ஆகிப் (இறுதியானவன்) என்ற தன் பெயரை விளக்கும் போது எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள செய்தி கூடுதலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்பு

நபியவர் கூறினார்கள் பிற நபிமார்களைவிட ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.

1 நான் ஒருங்கிணைந்த (பொருள்களை குறிக்கும்) சொற்கள்  வழங்கப் பட்டுள்ளேன்.

2 (எதிகளின் உள்ளத்தில் என்னைப்பற்றிய) பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றிஅளிக்கப்பட்டது

3 போர்பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

4 எனக்கு பூமிமுழுவதும் தூய்மையானதாகவும் பள்ளிவாயில் களாகவும் ஆக்கப்பட்டுள்ளது

5 நான் மனிதஇனம் முழுவதும் தூதராக அனுப்பப்ட்டுள்ளோன்

6 என்னுடன் நபிமார்கள் முற்று பெற்று விட்டார்கள்

 அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்   இப்னுமாஜா (43)

 

அல்லாஹ் எல்லா நபிமார்களுக்கும் அற்புதங்களையும் தனிச்சிறப்புகளையும் வழங்கியிருக்கிறான் அந்த வகையில் நபியவர்கள் தனக்குரிய தனிச்சிறப்புகளைப்பற்றிகூறும் போது பிறநபிமார்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக தன்னோடு நபிமார்களின் வருகை முடிந்து விட்டது என்பதை குறிப்பிட்டு கூறுகிறார்கள் ஏனென்றால் நபியவர்கள் வரை ஒரு நபிக்குப்பின் மற்றொரு நபி என்று தான் இருந்தது. அவர்கள் வருகைக்கு பிறகு அது தடைசெய்யப்பட்டுவிட்டுது.

கலீஃபாக்கள் வருவார்கள்

நபிமார்கள் பனூ இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இருந்தனர்.ஒரு நபி மரணிக்கும்  போது அவருக்கு பின்னால் மற்றோரு நபி வருவார் எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லை கலீஃபாக்கள் அதிகமாக வருவார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா  (ரலி)   நூல் : புகாரி (3455)

நபியவர்கள் பனூ இஸ்ரவேலர்களின் சமூதாயத்தை நபிமார்கள் வந்த நிலையைப் பற்றி தன்னுடைய சமூதாயத்தோடு  ஒப்பிட்டு கூறும் போது அந்த சமூதாயத்தில் ஒரு நபிக்குப் பின் மற்றொரு நபி தொடர்ந்து வருவார்.ஆனால் தன் சமு‏தாயத்தில் இறைத்தூதர்கள் வரமாட்டார்கள் கலீஃபாக்கள் மட்டும் தான் வருவார்கள் என்பதை தெளிவாக கூறியுள்ளார்கள்  .

மேலும் திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள் இவ்வுல அனைத்து மக்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று மிகத் தெளிவாக கூறுகிறது.

உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 4:79)

158. “”மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (அல்குர்ஆன் 7:158)

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 6:19)

இந்த திருக்குர்ஆனின் போதனைககள் யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் நபிகளாரே இறைத்தூதர் என்று இவ்வசனம் கூறுகிறது.

இன்னும் இதுபோன்ற பல வசனங்கள், நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வுலக அனைவருக்கும் இறைத்தூதர் என்று தெளிவுபடுத்துகிறது.

பொய்யர்களின் வருகை

நபி(ஸல்) அவர்களின் புகழழுக்கு ஆசைப்பட்டும் மக்களிடத்தில் ஆன்மீகத்தின் பெயரால் பணம் பறிக்கவேண்டும் என்ற நோக்கத் தோடும் தனக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களுக்கு பின் முஸைலமா  போன்ற பொய் நபிகளும் இன்றைய காலத்தில் மிர்சாத் குலாம்,ரஷாத் கலீபா போன்ற போலித் தூதர்களும் தங்களை நபியன்று வாதிட்டனர் இவர்களைப்பற்றி நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இணைவைப்பாளர்களோடு சேர்ந்து கொண்டு சிலைகளை வணங்கும் வரையும் என்னுடைய சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் வந்து அவர்கள் அனைவரும் தன்னை நபியன்று வாதிடுகின்றவரையும் மறுமைநாள் ஏற்படாது  அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)  நூல்: புகாரி(3535)

                       

நபியவர்கள் கூறினார்கள் நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச்செல்கிறேன் இதன் இரவும் பகலைப்போன்றது அழிந்து நாசமாகக்கூடியவனைத்தவிர வேறுயாரும் வழிதவறமாட்டார்கள்

அறிவிப்பவர்  : இர்பால் பின் ஸாரயா ரலி) நூல்  : இப்னுமாஜா (43)

திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நேரடியாகவும் உதாரணம் மூலமும் நபி(ஸல்) அவர்களே இறுதித் தூதுவர், அவர்களுக்கு பிறகு எந்த நபியும் வரமுடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே தெளிவான வழிகாட்டுதலை பின்பற்றி நடப்போம்.

                                                                                                                  அர்ஷத் அலீ, பனைக்குளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.