மற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா?

கேள்வி : assalamu allaikkum zee rasmin neengal srilanka vai sairnthar irunthalum oru kelvi ketkeeren adu sampnthamaga markkathil tirvu enna ? qustion ; tamil nattel ulla tntj -in unarvu vara idalil matra nam samudaya iyakkathai patri kutram kurai kuri saidighal illada natghal illai (viral vittu ennum allavil sila varanghallil saidughal illai) en ivvaru varugeerathu idan thirvu enna ?
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ஜி ரஸ்மின் நீங்கள் ஸ்ரீலங்கா வை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு கேள்வி கேட்கிறேன் அது சம்பந்தமாக மார்க்கத்தில் தீர்வு என்ன?கேள்வி : தமிழ்நாட்டில் இல்ல TNTJ வின் உணர்வு வார இதழில் மற்ற நம் சமுதாய இயக்கத்தை பற்றி குற்றம் குறை கூறி செய்திகள் இல்லாத naatka
sharfudeen abudhabi, uae
பதில் : அன்பின் சகோதரர் ஷர்புதீன் அவர்களுக்கு !
உங்கள் கேள்வி விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் நாட்டில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளில் முன்னனியில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகள் மற்றும் செய்திகளை வெளிக்கொணரும் முகமாக உணர்வு என்ற சமுதாயப் பத்திரிக்கை ஒன்றை நடத்திவருகிறது. அப்பத்திரிக்கையில் மற்ற அமைப்புக்களை விமர்சித்து எழுதுவது சரியா என்பதுதான் உங்கள் கேள்வி.
எந்த ஒரு அமைப்பானாலும் இஸ்லாமிய அமைப்பாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் போது அவ்வமைப்பு தனது செயல்பாடுகளையும் இஸ்லாமிய கொள்கைக்குற்பட்டதாகத் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இதை இந்தியாவைப் பற்றியோ அல்லது தமிழகத்தைப் பற்றியோ அறியாமல் எழுதவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவன் நான்.
அங்கு நான் வசித்த காலங்களில் இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்கள் இஸ்லாத்திற்கு மாற்றமாக எப்படியெல்லாம் நடக்கிறார்கள் என்பதையும் இதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா என்றும் நினைத்து பல முறை ஆதங்கப்பட்டதுண்டு.
ஆனால் இன்று அந்த வேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிகவும் வீரியமாகவும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலும் தெளிவாக செய்துவருகிறது.
உதாரணத்திற்கு
தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கியது.
காதர் மொஹிதீன் போன்றவர்கள் சாமியார்களின் கால்களில் வீழ்ந்தது.
ஜாக்கின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்திக் கொண்டது.
எம்.என்.பி அல்லது பாப்புலர் பிரன்ட் (அனைத்து ஆங்கில எழுத்துக்களிலும் இவர்களுக்கு இயக்கம் இருக்கும் போலுள்ளது) போன்றவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு என்ற பெயரில் கொடி வணக்கம் செய்வது.
கடந்த தேர்தலில் ஜெயித்த ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இயேசுநாதரின் புனிதம் பற்றிப் பாடப்பட்ட சி.டி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை.
கடந்த சில வருடங்களுக்கு முன் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பாக்கர் உள்ளிட்டவர்கள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டமை.
இலங்கை முஸ்லீம்களை அழித்து முஸ்லீம் சமுதாயத்தை நடுத்தெருவில் நிறுத்திய விடுதலைப் புலி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தமுமுக, பாக்கர் பாப்புலர் பிரன்ட் போன்ற அமைப்புக்கள் செயல்படுகின்றமை. (இது தொடர்பாக நான் உணர்வு பத்திரிக்ககையில் எழுதிய ஆக்கத்தைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள் )
இப்படி தமிழகத்தை சேர்ந்த பல அமைப்புக்கள் தங்கள் சுய நலத்திற்காக இஸ்லாத்தை தூக்கியெறிந்துவிட்டதை நாம் கண்முன்னால் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.
ஒருவர் அல்லது ஒரு அமைப்பு முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால், அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?
 
இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது.
 
இதற்கான சான்றுகள் இதோ :
 
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போது, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டு, அதற்கு முன் பின் வசனங்களை படித்தார். ‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
 
அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.‘தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டு, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79) என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.
 
இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் மக்களுக்குப் போதித்ததாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறி, மக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறு என்று யாராவது கூறுவார்களா?
 
ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது, தவ்ராத்தைக் கொண்டு வந்து, அதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?
 
வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவறவில்லை (3:78).
 
நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146).
 
வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறி, அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள், யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்படவில்லையே! அவருக்குப் பின்னர்தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறி, அவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.
 
மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.
 
பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?
 
ஒரு தவறை சுட்டிக் காட்டும் போது, தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும், இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளத்தை உழுக்கும் விதத்திலும் மழுப்பலோ, மறைத்தலோ, சுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்?
இயக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு தவரை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போதுதான் இது சாத்தியமாகும். இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்கள்.
 
தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.
 
இது போல், இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் அல்லாஹ் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களா?
 
ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார், முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறி, அனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?
 
காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணா? நாம் எமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட, காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.
 
அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனை, அதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.
 
இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)
 
‘கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போது“தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்
 
.அல் குர்ஆனும், சுன்னாவும் ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்து, அதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம். உணர்வு பத்திரிக்கையின் விமர்சனம் தவறு என்றால், வார்த்தை கடுமையானது என்றால், இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால், இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும், அதனை அப்படியே ஏற்று, அவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.
 
உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுதை’ என்றும்,‘மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால், அதனால் அவர்கள் ‘புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.
 
எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளை, கல்லறை வணக்கத்தை, தரீக்காக்களை, பித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடு, அல்லாஹ்வும் அவன் தூதரும் நளினம் தெரியாமல், மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.
ஆக அன்பின் சகோதரரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வுப் பத்திரிக்கை மற்ற அமைப்புக்களைப் பற்றி விமர்சிக்கும் போது பொய்யான தகவல்களை வெளியிட்டால் அதனை சுட்டிக்காட்டலாம், தட்டிக் கேட்க்களாம் ஆனால் இறைவனின் அருளால் உணர்வு செய்யும் சேவையினால் தமிழகத்தின் பல இயக்கங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை நினைத்து நாம் சந்தோஷப் பட்டு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
 
பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.