மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

குஜராத் மாநில அரசு இந்தக் கலவர வழக்கை சரியாக விசாரணை நடத்தாது என்று கருதிய உச்சநீதி மன்றம் கலவர வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு ளுஐவு என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு தக்க முறையில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சீல் வைத்து உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.அத்வானியே மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் உள்ளதாக தனது வுறவைவநச ல் எழுதினார்.
இதுதான் உண்மை என்று இந்திய மக்கள் அனைவரையும் பாஜகவினர் நம்ப வைத்து ஏமாற்றி வந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையால் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் ளுஐவு வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்i முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.
2 பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறை கேடு என்ற பிரச்சனை சில வருடங்களுக்கு முந்தியது என்றாலும் நீரா ராடியாவின் உரையாடல் அம்பலமானவுடன் ராசாவின் ராஜினாவைக் கோரியவர்கள்,பணத்தை விட அதிக மதிப்புள்ள மனித உயிகளைக் கொன்று குவித்த குற்றவாளியான நரேந்திர மோடி விஷயத்தில் மவுனம் காப்பது வியப்பாக உள்ளது.
ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிப்பதற்கு முன்னரும் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மராட்டிய முன்னாள் முதல்வர் மீது குற்றவாளி என்று தீர்ப்பு வருவதற்கு முன்னரும் குற்றச்சாட்டு வந்துவிட்ட காரணத்தினாலேயே பதவி விலகக் கோரிய பாஜக,அதிமுக,மதிமுக மற்றும் சில கட்சிகள் அதை விட பயங்கரமான குற்றச் செயலில் ஈடுபட்டதாக ளுஐவு யால் குற்றம் சாட்டப்பட்ட பின் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை.
எனவே மத்திய அரசாங்கம் நரேந்திர மோடி அரசை டிஸ்மில் செய்து கைது செய்ய வலியுறுத்தி இன்று (5.2.11) மாலை 4 மணிக்கு சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்கள்.பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
குறுகிய காலத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல்லாயிரகணக்கானோர் இதில் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒழுப்ப்பட்ட கோசம்
தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!

மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!

காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!

பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!

இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?

மௌனமென்ன மௌனமென்ன?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?

மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?

எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்

டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!

சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?

ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!

முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!

அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!

வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவே

எரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்

பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?

Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi Modi

நன்றி : TNTJ.NET

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.