பெருமையடித்தல்

 

Name(பெயர்)  : சபீனா இன்சாஃப், France

 

 

Title(தலைப்பு)  : பெருமையடித்தல்

அந்த காலம் முதல் இந்த காலம் வரை எந்த விசயமாக இருந்தாலும் நமக்காக செய்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்காக நாம் நிறையவே செய்கிறோம்.

உலகுக்காக மனிதர்களுக்காக பெருமையடிப்பதற்காக நாம் வீண் விரயங்களிலும் காசை சிலவு செய்வதிலும் பெண்களாகிய நாம் தான் முதன்மை இடத்தில் இருக்கிறோம் நம்மால் இயலவில்லை என்றாலும் கடன் வாங்கியாவது செய்ய முன் வருகிறோம் இதனால் இம்மையிலும் மறுமையிலும் என்ன பயன் என்பதை குர்ஆன் ஹதீஸ் படி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

 

வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது .அவன் மிகைத்தவன்;ஞானமிக்கவன் .(அல்குர் ஆன் 45:37 )

மேலும் கண்ணியம் எனது மேலாடை பெருமை எனது கீழாடை இதில் யார் என்னிடம் சண்டையிடுவாரோ அவரை நான் வேதனை செய்வேன் என்று   அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் அறிவிப்பவர் அபூஸஈத் ரலி அபூ ஹுரைரா ரலி நூல்( முஸ்லிம் 4752 )

எனவே பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது அதில் நமக்கு அணுவளவும் உரிமையில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் யாருடைய உள்ளத்தில் அணு அளவு பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று கூரினார்கள்.அறிவிப்பாளர் : இப்ன் மஸ்ஊத்(ரலி)நூல் : முஸ்லிம் 147

ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.  (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர். புஹாரி 4918

நாம் பூமியிலேயே நிலையாக இருந்து விடுவோம் என்ற எண்ணத்தோடு எவ்வளவு பெண்கள் அழகு , ஆபரணம் , செல்வம் , ஆடை , அலட்டல் போன்ற எல்லா விஷயத்திலும் பெருமை அட்டிக்கிறோம்.நமக்கு வாங்க வசதி இல்லை என்று நன்றாக தெரிந்தும் பிறரை விட நாம் நம்மை பெருமையாக காட்டிக் கொள்ளவே ஆபரணங்களிலும் ஆடைகளிலும் வீண் விரயம் நிறைய செய்கிறோம்.எந்த அளவிற்கு என்றால் ஒரு வீட்டிற்கு போனால் இந்த முறை நான் இதை உடுத்தி போனேன் அடுத்த முறையும் நான் இதையே உடுத்தி போனால் என்னிடம் இல்லை என்று எண்ணுவார்கள்,கஞ்சம் என நினைப்பார்கள் என்று நினைத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது உடை, அதில் ஒரு பெருமை.ஆபரணத்தை நாம் அவரை விட பெரிய அளவில் போட்டுக் கொள்ள வேண்டும் அல்லது கணவன் மார்களை கடனாளியாக்கியாவது அவர்களுக்கே தெரியாமல் ஆபரங்களை வாங்கி அதை அணிந்து பெருமை அடித்துக் கொள்கின்றனர்.
நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.நம் உறவினர்களிலேயே எத்தனையோ பேர் உடுத்த நல்ல உடை இல்லாமலும் உணவு இல்லாமலும் இருப்பார்கள் அவர்களை நாம் என்றாவது எண்ணி பார்த்தோமா ?நாம் பெருமைக்காக வீண் விரயம் செய்யும் பணத்தை அவர்களுக்கும் உண்ணவும் உடுத்தவும கொடுத்தால் அல்லாஹ் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நிறைய கொடுப்பான் என்பது நாம் தவறி விட்டோம்.

   وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا  ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 4:36)

இன்னும் சில பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள் , அவர்கள் பேசினாலே பெருமையடித்து பேசுவது தன்னை போல் அறிவு , பொறுப்பு ,அழகு இல்லை எனவும் என்னை போல் யாராவது சிலை காரியங்களை செய்ய முடியாது எனவும் பெருமை அடிப்பதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.நமக்கு அல்லாஹ் கொடுத்த அழகிற்கும் அறிவிற்கும் திறமைக்கும் நன்றி செலுத்துவதை விட்டு விட்டு பெருமை அடித்து அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறோம்.
.

   وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ  ۖ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.(அல் குர்ஆன் 17:83)

இன்னும் அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான் :

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்தி-ருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.(அல் குர்ஆன் 4:173).

   وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا  ۖ إِنَّكَ لَن تَخْرِقَ الْأَرْضَ وَلَن تَبْلُغَ الْجِبَالَ طُولًاமேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.(அல் குர்ஆன் 17:37)

இவ்வசனங்களிளிருந்து பெருமை அடித்தால் வேதனை தான் உண்டு என்பதை அல்லாஹ் நமக்கு எச்சரிக்கிறான்.எனவே எந்த தேசத்திற்கு அதிபராக இருந்தாலும் படைத்த ரப்புல் ஆலமீனுக்கு நாம் அடிமை தான் என்பதை நாம் உணர்ந்தாலே பெருமை நம்மை விட்டு விலகி விடும்.எனவே படைத்தவனையே பெருமை படுத்துவோம் .பெருமைக்குரியவனும் புகழுக்குரியவனும் அல்லாஹ் ஒருவனே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.