முஸ்லிம்கள் வீதிகளில் மேற்கொள்ளும் பிரார்த்தனைகளை தடுக்க பிரான்ஸ் முடிவு

[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 05:35.57 மு.ப GMT ] : தலைநகர் பாரிஸ் மற்றும் அருகாமை பகுதிகளில் முஸ்லிம்கள் வீதிகளில் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இதனை தடுப்பதற்கு பிரான்ஸ் அரசு பயன்படுத்தப்படாத கட்டிடங்களை பிரார்த்தனைக்கு தர ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முடிவை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிஸிடே குயின்ட் தெரிவித்தார். அரசு ஒதுக்கும் கட்டிடங்களை முஸ்லிம் தலைவர்கள் பார்த்து அதற்கு ஒப்புக் கொண்டனர்.

வீதிகளில் பிரார்த்தனை செய்வது என்பது ஏற்க முடியாத ஒன்று. பிரான்சின் மதச்சார்பின்மை கொள்கைக்கு இது முரணானது என அமைச்சர் தெரிவித்தார். வீதிகளில் நடக்கும் பிரார்த்தனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளுர் மசூதிகளில் போதிய இடம் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் பாரிசின் 18வது அரோன்டிஸ் மென்ட்டில் 2 வீதிகளில் பிரார்த்தனை நடத்தினர். முஸ்லிம்கள் பிரார்த்தனைக்கு ஒதுக்கப்படும் கட்டிடங்கள் செப்டம்பர் 16ஆம் திகதி முதல் தயார் நிலையில் இருக்கும்.

பெரு பிரான்சின் 2வது நகரமான மார் செய்லேவிலும் வீதிகளில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அங்கும் வீதி பிரார்த்தனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

செய்தி : Newsonews.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.